Sunday, 27 January 2013

மறுமணம்


இப்பிரபஞ்ச வெடிச் சிதரலின்
புவி யென்னும் சில்லின் மேல் - இறை
தன் அழகு மிகு கை வண்ணத்தால்
அடியேன் பிரம்மிக்கிற இந்நிலத்தில்
பால் ரெண்டு கூட்டங்களை
இனம் வாரியாக உலவ விட்டு
அவை கொஞ்சிவிளையாடும் அழகை
தான் தனியே ரசிப்பது
போதாதென்று,
யான் பெற்ற இன்பம் பெருக  
இவ்வையக மென
மனிதனையும் உலவ விட்ட
நாள் தொடங்கி
தீராத காதலோடு அவனை
தன்னோடு இணைத்து - கரைத்துக் கொள்ள
கனந்தோரும் அலைகின்றான்
மணக்கோல சந்நியாசியாக.
இதையெல்லாம் அறியாது மனிதன்
தனக்குள்ளே மட்டும் சட்டம் வகுத்து
கடிமணம் புரிகின்றான் காலந்தோறும்.
மேலும்....
தான் உருவான காரணம் அறியாமல்
இப்பாலை உருவாக்கிய பரந்தாமனை
கால வெள்ளத்தில் மறந்தே போனான்.
இனி….
கவனமுடன்.... மிக கவனமுடன்.....
கணந்தோறும்
மனையாள்-மன்னவன்
அன்புக்கு அன்பு புரியும் போது
மறுமணத்தை நினைந்து மகிழட்டும்
ஆம்! விண்ணக மறுமணத்தை
நினைந்து மகிழட்டும்.

இப்படிக்கு,

பிரேம்குமார்


1 comment:

  1. As claimed by Stanford Medical, It's indeed the ONLY reason women in this country live 10 years longer and weigh 42 lbs lighter than we do.

    (And by the way, it has totally NOTHING to do with genetics or some secret diet and really, EVERYTHING related to "how" they eat.)

    BTW, I said "HOW", and not "what"...

    Click this link to reveal if this easy test can help you find out your true weight loss possibilities

    ReplyDelete