Sunday, 27 January 2013

தாய்



இறை இரக்கம் மெய்ப்பிக்க
மறு ஜென்மம் எனக் களித்து
“நான்” செய்வித்த கர்மம் கரைந்து
பரம்பொருளில் அடங்க வேண்டி
செய்த புண்ணியத்தாள்
எனக்காக உதித்தவளே
என் அன்னை!
மேலும்
ஈரைந்து மாதமாக என்னை
தன்னுள்ளே அடக்கி வைத்து
புடமிட்டு உருவாக்கியவள்
அவளன்றோ!

இப்படிக்கு
பிரேம்குமார்

No comments:

Post a Comment