புவி யென்னும்
சில்லின் மேல் - இறை
தன் அழகு மிகு கை
வண்ணத்தால்
அடியேன்
பிரம்மிக்கிற இந்நிலத்தில்
பால் ரெண்டு
கூட்டங்களை
இனம் வாரியாக உலவ
விட்டு
அவை
கொஞ்சிவிளையாடும் அழகை
தான் தனியே
ரசிப்பது
போதாதென்று,
யான் பெற்ற இன்பம் பெருக
இவ்வையக மென
மனிதனையும் உலவ
விட்ட
நாள் தொடங்கி
தீராத காதலோடு அவனை
தன்னோடு இணைத்து -
கரைத்துக் கொள்ள
கனந்தோரும்
அலைகின்றான்
மணக்கோல
சந்நியாசியாக.
இதையெல்லாம்
அறியாது – மனிதன்
தனக்குள்ளே மட்டும்
சட்டம் வகுத்து
கடிமணம்
புரிகின்றான் காலந்தோறும்.
மேலும்....
தான் உருவான காரணம்
அறியாமல்
இப்பாலை உருவாக்கிய
பரந்தாமனை
கால வெள்ளத்தில்
மறந்தே போனான்.
இனி….
கவனமுடன்.... மிக
கவனமுடன்.....
கணந்தோறும்
மனையாள்-மன்னவன்
அன்புக்கு அன்பு
புரியும் போது
மறுமணத்தை நினைந்து மகிழட்டும்
ஆம்! விண்ணக
மறுமணத்தை
நினைந்து
மகிழட்டும்.
இப்படிக்கு,
பிரேம்குமார்


