Sunday, 27 January 2013

ஹார்மோன்களின் அட்டகாசம்


“ஒருவரை
இச்சையோடு பார்க்கும் நோக்கில் அவனோடு / அவளோடு
விபச்சாரம் செய்தாயிற்று!”
                     – யேசு

காலம் கடந்து,
காமன் அரண்சூழ,
கற்போடு காத்திருந்து,
பட்டமரம் போல் காட்சியளித்து,
வேண்டாம் இந்த வாழ்கை! என 
சடா முடி தறித்து தப்பிவிடாமல்,
தைரியமாய் வாழ முற்படுவோரை
சபிக்கப்பட்டவர்கள் என்று பெயரெடுத்து,
சரீரத்தை அடக்க முயற்சித்தாலும்…….

ஹார்மோன்களின் அட்டகாசத்தால்
ஓயாமல்
கடவுளுக்கு முன்
நிற்க வெட்கப்படுகிறோம்.

இதற்குத்தான்
கடவுள் மனிதனாக
பிறக்க வேண்டும்
என்றானா கவி?

இப்படிக்கு,
பிரேம்குமார்


No comments:

Post a Comment